உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலில் 25 சதவீத அரசியல் அனுமதி பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோட்டா முறை குறித்து மறு பரிசீலனை செய்யப்பட்டு வருவதுடன் அதற்கான கருத்தாடல்களும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. இவ்வருட இறுதியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்விடயம் பேசுபொருளாகியிருப்பது வரவேற்கத்தக்கது. தேர்தல் காலங்களில் வழங்கும் வாக்குறுதிகள் போலவே இவ்விடயமும் வெறும் உறுதியோடு போய்விடுமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. சொல்ல முடியாதளவில் பல பிரச்சினைகளை எதிர் கொண்ட ஆபிரிக்க நாடான ருவாண்டா பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தில் முதலிடம் வகித்துள்ளது....
''உலகின் அதிசிறந்த தேயிலை எனும் பெருமையுடன் 150ஆவது வருடத்தை கொண்டாடுகின்றோம்'' பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் வடிவமைக்கப்பட்ட பதாகையில் பொறிக்கப்பட்டிருந்தது. CRT (Coconut, Rubber, Tea) வர்த்தக கண்காட்சி 2017 கடந்த வார இறுதியில் BMICH இல் நடைபெற்றது. இக்கண்காட்சி பதாகையில் பொறிக்கப்பட்டிருந்த அந்த வரிகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் வாயிலின் உள்ளே சென்றப்பின் மனதுக்கு பெரும் வருத்தத்தையும் தந்துவிட்டது. இந்நிலையிலேயே இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து, சர்வதேசத்திற்கு இலங்கையை அடையாளப்படுத்துவதில் முன்னிலை வகித்த 'தேயிலை' யின் நிலைமை பற்றி அலசுகிறது இவ்வார...