இரண்டரை வயதில் நாட்டியத்துறைக்குள் பிரவேசித்து இரண்டு தசாப்தத்தை தொட்டுள்ள அம்ரிதா விஸ்வநாதன்

April 07, 2021


இரண்டரை
 வயதில் நாட்டியத்துறைக்குள் புகுந்து சுமார் இரண்டு தசாப்த காலமாக தொடர்ச்சியாக பயணிக்கும் கலைக்குடும்பத்தின்மூன்றாவது தலைமைமுறை வாரிசு கலாவித்தகர் அம்ரிதா விஸ்வநாதன் சர்வதேச வணிகம் மற்றும் வர்த்தக துறை சார் பட்டதாரிதற்பொழுது கொழும்பில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் பிரிவில் சிரேஷ்ட  உயர் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.  அது மாத்திரமல்லஊடகத்துறையிலும் பகுதி நேர தொகுப்பாளினியாக கடந்த ஐந்து வருடமாக பணியாற்றி வரும் இவர் நாட்டிய கலாமந்திரின் சிரேஷ்ட கலைஞரும் கூடஇளம் வயதுடைய கலைஞராக இருந்தாலும் உள்நாடு உட்பட சர்வதேச மேடைகளிலும் தனது ஆற்றுகைகளை வெளிப்படுத்திய துடி துடிப்பான கலைஞராக வலம் வரும் இவர் தமழினர் இலக்கிய சங்கமத்தின் இளம் கலைஞர் விருந்தினராக அவர் எம்முடன் பகிர்ந்துக் கொண்டவை எமது வாசகர்களுக்காக....  


உங்களது அத்தையே குருவாக அமைந்த அனுபவம் ?

மாத்ரு தேவோ பவபித்ரு தேவோ பவஆச்சார்ய தேவோ பவஅதிதி தேவோ பவ!

 K .சண்முகம்பிள்ளை மற்றும் திருமதிவிஜயலக்ஷ்மி சண்முகம்பிள்ளையின் வழி தோன்றிய நான்இலங்கையின் கலை பாரம்பரியமிக்க கலைக்குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்சிறு பராயத்திலிருந்தே என் குடும்ப பின்னணி காரணமாகவும்எனது தந்தையான   எஸ்விஸ்வநாதன் மற்றும் தாய் திருமதிசாந்தி விஸ்வநாதனின் வழிகாட்டலில் கலை மீது மிகுந்த ஆர்வம் கொண்டேன்நான் இரண்டரை வயதிலிருந்து சரிவர நாட்டிய பயிற்சியைஎனது அத்தையான காலசூரிஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் இடமிருந்து பெற்றுகடந்த இருபத்து இரண்டு வருட காலமாக ஆயிரக்கணக்கான இலங்கை மற்றும் சர்வதேச அரங்குகளில் நடனமாடியுள்ளேன்.


அத்தை எனது குருவாக அமைந்ததன் காரணமாகநாட்டிய கலை எனது இயல்பு வாழ்க்கையோடு ஒன்றிவிட்டதுகாரணம் என்னுடைய வாழ்வில் அதிகளவிலான நேரத்தை நாட்டியம் கற்பதிலேயே செலவிட்டுள்ளேன்வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும்பயிற்சியின் போது குரு - சிஷ்யை என்ற உறவே மேலோங்கி காணப்படும்.


நடன வகுப்புகளுக்கு வரும் மற்றைய மாணாக்கள் போலவே தான் நானும் இந்த கலையை கற்று வந்தேன்அத்தை வீடு என்பதால் வெளியே செல்ல வேண்டிய தேவை இல்லைகிட்டதட்ட குருகுல கல்வி முறைபாசத்தை அள்ளி வழங்க தாத்தாஅதே வேளையில் தொடர்ச்சியான பயிற்சியை வழங்கும் அத்தை என சிறப்பான அனுபவம்என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சிறந்த கலைஞராக என்னை உருவாக்கிய பெருமை என் குருவையும்என் மகா குருவான என் தந்தையையுமே சாரும்.


2: கலைக்குடும்பத்தினை சேர்ந்த நீங்கள்அடுத்த கட்டத்தினை நோக்கி எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்?


கலை எல்லையற்றதுகற்றல் ஒரு மனிதனை புது புது பாதைகளை தேடிச்செல்ல வைக்கும்மேலும் சிறந்த கலைஞராக என்னை வளர்த்துக்கொள்ளவதற்குஎன்னுடைய பயணமானது மேலதிக கற்கையை நோக்கியே உள்ளதுஎன்னுடைய முன்னோர்கள் எவ்வாறு அயராது உழைத்து இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு வழங்கி சென்றார்களோஅவர்களின் வழியில் நானும் இந்த கலையின் புனிதத்தினை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன்.


3: உங்களை பற்றிய அறிமுக குறிப்புமற்றும் தற்போது என்ன செய்கின்றீர்கள்மற்றும் கலை மேலுள்ள ஆர்வம் பற்றி?

நான் சர்வதேச வணிகம் மற்றும் வர்த்தக துறை சார் பட்டதாரிதற்பொழுது கொழும்பில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் பிரிவில் சிரேஷ்ட  உயர் அதிகாரியாக பணியாற்றி வருகின்றேன்அது மாத்திரமல்லஊடகத்துறையிலும் பகுதி நேர தொகுப்பாளினியாக கடந்த ஐந்து வருடமாக பணியாற்றி வருகின்றேன்கலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் எங்கள் வீட்டில் வழங்கப்பட்டதோ அதே அளவு முன்னுரிமை கல்விக்கும் வழங்கப்பட்டது.

ஒருபுறம் கலை ஆர்வம் அதிகளவில் இருந்தாலும் என்னுடைய பெற்றோர்நானும் என்னுடைய  சகோதரனும் நன்கு கல்வி கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்அதன் காரணமாக பாடசாலை கல்வியைத் தொடர்ந்து மேற்படிப்பையும்அத்தோடு வட இலங்கை சங்கீத சபையால் வருடாந்தம் நடாத்தப்படும் சங்கீத மற்றும் நாட்டிய பரீட்சைகளை முழுமையாக பூர்த்தி செய்து "கலாவித்தகர்பட்டத்தினை 2016ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டேன்.

அது மாத்திரமல்ல, Wendy Whatmore Academy of Speech & Drama வில் ஆசிரிய தர தேர்வுகளை 2016ஆம் ஆண்டில் பூர்த்தி செய்தேன்அறியாத பருவத்திலிருந்தே இந்த கலை சார் ஆர்வம் எனக்கு வந்ததற்கு காரணம் என்னுடைய குடும்ப பின்னணிமற்றும் என்னுடைய குடும்பத்தினர் கலை மீது கொண்டிருந்த அளவில்லா மதிப்பும் மரியாதையும்அது மாத்திரமல்லஎட்டு வயதில் இந்தியாவின் முதல் தர பரதநாட்டிய விற்பன்னர் பத்மஸ்ரீ அடையாறு K. லக்ஷ்மணன் தலைமையில் அரங்கபிரவேசம் (Arangetram) செய்யும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது.

 நாட்டியம் பார்வையாளரை மகிழ்விக்கும் ஆற்றலை  மட்டும் கொண்டதல்லநடனமாடுபவரையும் அகத்தே மகிழ்விக்கும் சக்தி கொண்டதுஇது மகிமை வாய்ந்த தவம்ஒரு கலைஞரைகுறிப்பாக ஒரு பெண்ணை அகம் மற்றும் புறத்தே உறுதிப்படுத்தும் மகிமை கொண்டதுஇது ஓர் உணர்வுஉணர்ந்தால் மட்டும் தான் புரியும்இவை அனைத்துடன் எனது கலை பயணமும் தொடரும்.

 

 4: தந்தையின் பங்களிப்பு

நான் முன்னர் கூறியது போலஎனது தந்தை தான் எனக்கு மகா குருஅப்பாவின் செல்லப்பிள்ளை நான்எத்தனை வயதானாலும்அன்போடும் பாசத்தோடும் எனக்கு என்றும் மிகப்பெரிய உறுதுணையாக நிற்பவர்கலைத்துறையில் மாத்திரமல்லநடைமுறை வாழ்க்கையிலும் எமது நல்வாழ்வு தொடர்பாக அதிகம் கவனம் கொண்டவர்அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் ஒரு மிகப்பெரிய சாதனையாளராக இருந்தாலும்தகப்பன் ஸ்தானத்தில் அவர் கடமை தவறாமல் எங்கள் முன்னேற்றத்திற்க்குதுறை சார் நுணுக்கங்களைப் பற்றிய அவரின் எண்ணப்பாடுகளை நாளாந்தம் எம்மோடு பகிர்ந்துக்கொள்வார்.

 என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்அவரினூடாக நான் கற்றதே அதிகம்மறு புறத்தில் அம்மாஅப்பா எவ்வாறு எங்கள் முன்னேற்றத்திற்கு வழி அமைத்து தந்தாரோஅதில் சரியாக பயணிக்க அம்மா தான் பெரும் பங்காற்றியவர்அனைத்து வகையிலும் அவரின் முழுமையான பங்களிப்பை வழங்கி எமது வெற்றியை எமக்கு பின் நின்று கொண்டாடுபவர்அப்பா மேடையில்அம்மா மேடைக்கு பின்னால் எனக்கு என்றும் உறுதுணையாய் நிற்பவர்கள்இந்த இருவருக்கும் நான் இந்த வேளையில் சிரம் தாழ்த்திபாதம் தொட்டு வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

5: நாட்டிய கலா மந்திரின் சிரேஷ்ட கலைஞர்களுடனான தொடர்பு?


நாம் அனைவரும் சிறுவயது முதல் அதிகளவிலான மேடைகளில் ஒன்றாக நடனமாடிஒன்றாக வளர்ந்த கலைஞர்கள்எமக்கிடையில் எவ்விதமான பாகுபாடும் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்ததில்லைஎனக்கு தனிப்பட எந்த சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது இல்லைஅவர்கள் என்னை குரு வீட்டுப்பிள்ளையாக பார்த்ததும் இல்லைநான் அவ்வாறு நடந்து கொண்டதும் இல்லைஎம் தனிப்பட்ட குடும்பங்களோடு செலவழித்த நேரத்தை விட தோழிகளாய் நாம் ஒன்றாக செலவழித்த நேரமே அதிகம்இது ஓர் அழகிய குடும்பம்எனது வளர்ச்சியில் இவர்களின் பங்களிப்பும் உண்டுஎன்றும் எம் நட்பை தாண்டிய பந்தம் தொடரும்.

6: நடனத்துறையில் ஆர்வம் கொண்ட நீங்கள்இதை முழு நேர தொழிலாக எடுப்பீர்களாஅல்லது பகுதி நேர தொழிலாக எடுப்பீர்களா?

முன்னர் தெரிவித்தது போல் நான் இன்னும் நடனக்கலையில் கற்க வேண்டிய விடயங்கள் கடலளவுஇன்னும் ஒரு மாணவராகத்தான் இருக்கின்றேன்இந்த உலகினை சிறந்ததொரு வாழுமிடமாக அமைக்கக்கூடிய சக்தி கலைக்கு மட்டுமே உண்டுஅந்த நம்பிக்கையின் பிரகாரம்என்றும் சிறந்ததோர் கலைஞராக வாழ ஆசைப்படுகிறேன்தற்போது பலதுறைகளில் ஈடுபட்டு இருக்கிறேன்எதிர்காலம் யாருக்கும் எப்படி வேண்டுமானாலும் அமையலாம்இறைவன் ஆசிக்கேற்பஎது நடந்தாலும் மகிழ்ச்சி!

 

உரையாடல் - ராம் ஜீவா

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images