'ஒவ்வொரு புதிய நாளுமே பெண்களுக்கு சவாலானதே' - ஜீவா சதாசிவம்

March 08, 2021

 சர்வதேச மகளிர் தினத்திற்காக 2021 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் சவாலுக்கான தெரிவுகள் (Choose to Challenge) என்பதாக அமையப் பெற்றுள்ளதுநாளாந்த வாழ்வின் சவால்களை எதிர்கொண்டவாறே சமூகம்,கலை ,இலக்கியம்கல்விஊடகம்மொழிபெயர்ப்பு என பயணிக்கும் சில பெண் ஆளுமைகளுடனான 


உரையாடல் மகளிர் தின சிறப்பு பதிவாக இடம்பெறுகிறது.


 

பொதுவெளியைக் கண்டு அஞ்சி இருட்டு மூலைகளில்-  பாதுகாப்பைத் தேடும் முயற்சி ர்த்தமற்றதுவசந்தி தயாபரன்

ஈழத்து இலக்கிய உலகம் நன்க றிந்த  பல்துறை இலக்கிய ஆளுமை'தகவம்'  அமைப்பின் செயலாளர் எழுத்தாளர் திருமதி வசந்தி தயாபரன்  தனது ருந்தைபகிர்ந்துக்கொள்கிறார்:

பெண் தனது பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதையே சகித்துக் கொள்ள முடியாத சமூகம்அவளது எழுத்துக்களை சகித்துக் கொள்ளாதது புதுமையன்றுஎழுத்தாளர் பெண்ணாக இருந்தால்அதுவும் சமூகத்தை விமர்சித்து எழுதிவிட்டால்அவளது எழுத்துக்கள் பூதக்கண்ணாடி கொண்டு அலசி ஆராயப்படுவதுடன் அவளும்   'மெல்லும் வாய்களுக்குஅவலாகிறாள்.

எழுதப் புறப்படும் பெண்களின்மீதான உளவியல் போர்தொடுப்பு முறைதான் அதுஎமது நாட்டில் படைப்பாற்றல் மிக்க சகோதரிகள் பலரது கைகளைக் கட்டிப் போடுவதும் இதே காரணிகள் தான்பெண்ணின் எழுத்துக்கள்  கருத்துக்கள் என்பவற்றுடன் மோதமுடியாதபோதுதாக்குதல் அவளை நோக்கித் திசைதிரும்புகின்றது.

இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போர்முறைமேலும் உத்வேகத்துடன் ழுத முற்படுதல் ஒன்றேயாகும்ஆயாசத்துடன் ஒதுங்கி விடுவதல்லபொதுவெளியைக் கண்டு அஞ்சி இருட்டு மூலைகளில் பாதுகாப்பைத் தேடும் முயற்சி அர்த்தமற்றது.

நமது நாட்டில் படைப்புத் துறையில் மேற்கிளம்பி வருகின்ற பெண்களின் எண்ணிக்கை கவலை அளிக்கிறது.  தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து எழுத்துத்துறையில் செயற்பட இளம்பெண்கள் முன்வாருங்கள்.

சவால்களை எதிர்கொள்ளத் தயாராகி விட்டால் பெண்களின் எழுத்துக்கள் சரித்திரம் படைக்கும்தாஹிர் நூருல் இஸ்ரா

சமூக சேவைத் துறையில் முதுதத்துவமாணி பட்டம்பெற்றுள்ள களச் செயற்பாட்டாளரும் தேசிய கல்வி நிறுவகத்தின் விசேட கல்விக்கான உதவி விரிவுரையாளருமான இஸ்ரா பின்வருமாறு கூறுகிறார்.

சவாலை தெரிவு செய்வதற்கு(Choose to Challengeஉகந்த நபர்கள் யார் என்றால் அது 'பெண்என்பது எனது உறுதியான நம்பிக்கைபெண்ணை பொருத்தவரை ஒவ்வொரு புதிய நாளுமே சவாலாகவே அமைகின்றதுஅவள் பிறப்பிற்கு முன்னிருந்தே உடல்சமூகபொருளாதார ஆன்மீக மற்றும் கலாசாரரீதியில் சவாலைச் சந்தித்து வருகின்றாள்அவளுக்கு இப் 'புதிய சாதாரணசூழலில் (NEW Normalசவாலை தெரிவு செய்வது ன்பது புதிய விடயமல்ல.

கொவிட்-19 பரவலுடன் வேகமாக மாறிவரும் உலகின் மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பதற்கு ஏற்றவகையில் பெண் தன்னை 21ஆம் நூற்றாண்டின் புரட்சிப்பெண்ணாக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளதுகுறிப்பாக 21ஆம் நூற்றாண்டின் திறன்களை (21st Century learningவிருத்தி செய்துக்கொள்வது தனது இருப்புக்கான அத்திவாரமாகின்றதுஅவ்வகையில் 21ஆம் நூற்றாண்டில் நபரொருவரிடம் எதிர்பார்க்கப்படும் பிரதானமான திறன்களில் கற்றல் திறன்கள்கல்வியறிவு திறன்கள்மற்றும் வாழ்க்கை திறன்கள் என்பன முக்கியம் பெறுகின்றன.

குறிப்பாக கல்வியறிவு திறன் என்பதில் கவனத்தில்கொள்ளப்படும் தகவல்ஊடக திறன் மற்றும் தொழிநுட்ப திறன் என்பன முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைஎனவே இன்றைய தொழிநுட்ப அறிவு என்பதனை மிகவும் லாவகமாகவும் முதலீடாகவும் பயன்படுத்தவேண்டிய உன்னதமான காலத்தில் பெண்ணானவள் இருக்கின்றாள்.

அச்சில் ஏற்றப்பட்ட இலக்கியங்களே இனி சாகாவரம் பெறவுள்ளனஅவைதான் எம்மை செம்மையாக்கவும்எமது ஆதாரமாகவும் நிலைப்பெறவுள்ளனஅவ்வகையில் இலக்கியங்களுக்கு அபரிமிதமான ஒரு வலிமை இருக்கிறதுஅவ் இலக்கியங்களை படைக்கும் பெண்படைப்பாளி தனது எழுத்துக்களின் ஊடாக அவளது உலகத்தையும் அவளது உணர்வையும் அழகுற எடுத்தியம்ப முற்படுகிறாள்.

எனவே இனி எழுத்துக்களுக்கு உயிரும் உணர்ச்சியும் ஏற்றி சுடச் சுட திறைகளில் (Screenவாசிக்கவும் வாழவும் வாய்ப்பு பிறந்துள்ளதுஅவளது போராட்டம் எழுத்தாணியுடன் குருதி எழுத்துக்களாய்ப் பச்சைக் குத்தப்படும்அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.


இந்த அரசியல் மாபெரும் சவாலாக ள்ளது - சிவலிங்கம்  அனுஷா 


கொழும்புப் பல்கலைக்கழகத்தில் டக கற்கை துறையில் விரிவுரையாளராக கடமையாற்றும்  சிவலிங்கம் அனுஷா இளம் இலக்கியவாதிமொழிப்பெயர்ப்புத்துறையில் ஆர்வம் மிகுந்தவர்இதுவரையில் மூன்று சிங்கள மொழி நூல்களை தமிழ் மொழிக்கு மொழிப்பெயர்த்துள்ளதுடன் 'தாராஎன்ற மொழிப்பெயர்ப்பு நூலுக்கு 2019ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய மற்றும் சிறந்த மொழிப்பெயர்ப்புக்காக கொடகே சாஹித்ய விருதையும் பெற்றவர்இவரது கருத்து இவ்வாறு அமைகிறது: 

சமூகமட்டத்தில் பல சவால்களை எதிர் நோக்கும் அனு எம்முடன் தனது கருத்தை இவ்வாறு பகிர்ந்துக்கொள்கின்றார்.

'என்னைப் பொறுத்த வரைக்கும்எனது அனுபவத்திற்கமையதமிழ் இலக்கிய துறையில் பயணிப்பது சிங்கள இலக்கிய துறையில் பயணிப்பதை விட மிக கடினம்என்றே சொல்வேன்ரு இளம் பெண்ணாக இந்த துறையில் பயணிக்கும் போதுகை கொடுப்பவர்களை விட தள்ளி விடுபவர்களே அதிகம்.

இளையோரை வளர்த்து விட கூடாதுவர்களை எழும்பவே விடக்கூடாதுன்ற நிலையே இத்துறையில் காணப்படுகின்றதுசுயநலம் என்பதே இத் துறையில் உள்ள மிகபெரிய பிரச்சினையாக பார்க்கிறேன்மூத்த எழுத்தாளர்களில் இளையோருக்கு கை கொடுப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும்.

நான் ஒரு எழுத்தாளர் என்பதனையும் விட மொழிபெயர்ப்பாளர் என்கின்ற வகையில் வித்தியாசமான பிரச்சினைகளை சந்திக்கிறேன்.

எந்தவொரு இலக்கிய படைப்பொன்றை  உருவாக்கினாலும்அது இலங்கை தமிழ் இலக்கியத் துறையில் ஏற்கனவே பிரிந்திருக்கும் குழுக்களால் வரவர் குழுக்களுக்கு சேர்ந்ததாக அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்

இந்த அரசியல் மாபெரும் சவாலாக ள்ளதுஅதேவேளைஎழுத்தாளர்கள் அனைவருக்கும் அவர்களின் படைப்புகள் சகோதர மொழியில் வருவது தேவையாக உள்ளதுஅதற்காக பலர் என்னை நாடுகின்றார்கள்எனக்கு உள்ள நேர அவகாசத்தை வைத்துநான் மிக முக்கியமாக கருத்தும் சிலதை மட்டுமே என்னால்மொழி பெயர்க்க முடிகிறதுநேரப்பிரச்சினையினால் சில }ல்களைத் தவிர்க்கும் போது எனது அனைத்து முயற்சிகளையும் வமதித்து பொது வெளிகள் , சமூக லைத்தளங்களில் தமக்கு விருப்பமா கருத்துக்களை பதிவிடுவது வருத்தமாக இருக்கும்

இவை அனைத்தையும் தாண்டி இத் துறையில் பயணிக்கும் போதுநம் சமூகம்குடும்பம்நண்பர்கள் சிலர்  ''உனக்கெல்லாம் இது தேவையாநீ செய்யும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருஎன்ன இருந்தாலும் நீ ஒரு பெண்'' எனச் சொல்லுவார்கள்.

அவற்றை எல்லாம் தாங்கி கொண்டு மூகத்திற்கு ஏதாவது நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் நமது எழுத்துக்காளால் ஏதோவொரு மாற்றத்தை எற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சவால்கள் நிறைந்த இப்பாதையில் பயணிக்கின்றேன்.


இவ்வுலகை மாற்றுவதற்கான சவாலை 

பெண்களே தன் கையில் எடுத்துள்ளார்கள் சுசிலா யோகராஜன் - 


சமூக சேவைத் துறையில் முதுதத்துவமாணி பட்டம்பெற்றுள்ள களச் செயற்பாட்டாளரும் மலையகப் பெண் ஆளுமைகளில் ஒருவருமான  இவர் பின்வருமாறு கூறுகிறார்.

இக்காலகட்டத்தில் ஒரு எச்சரிக்கை நிறைந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்இவ்வருட களிர்தின கருப்பொருளும் சவாலுக்கான தெரிவு என எச்சரிக்கையை பறைசாற்றும் வகையிலேயே அமைந்துள்ளதுநாம் அனைவரும் பெண்களின் சாதனைகளை தேடவும் கொண்டாடவும் வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்துஅவ்வகையில் பல பெண்கள் தன் பேனா முனையால் இவ்வுலகை மாற்றுவதற்கான சவாலை தன் கையில் டுத்துள்ளார்கள் என்பதை எம்மால் மறுக்கமுடியாதுபத்தில் ஆறு பேர் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்.

அவர்களின் ஒவ்வொரு எழுத்தும் சவால் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒளவை தொடங்கி அம்பை என பெண் எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானதுஅம்பைப் போன்ற பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தேசமொழிபால் என்ற எல்லைகளைத் தாண்டிச் சென்று சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றதுஆனால் அறிமுகமோஆதரவோஊடக கவனிப்போ இல்லா எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்

எழுதுவதற்கான ஆற்றல் இருந்தும் தன் வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கான நேரத்தை ஒதுக்கமுடியாமல் தனக்குள்ளேயே தன் திறனை புதைத்துக்கொண்டிருக்கும் பலரையும் காணலாம்அவ்வாறு தங்கள் மகத்தான ஆக்கங்களை வெளிவுலகிற்கு கொண்டு வர காத்திருக்கும் மற்றும் எழுத்து உலகில் காணப்படும் தோல்விகளை கண்டு துவண்டு விடாது வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

கலைச்செல்வி' நிர்மலாஜோன் 

இவ்வாறு கூறுகின்றார்...

 

நிர்மலாஞ்சலி நாட்டிய பள்ளியின் ஸ்தாபகரும் மூன்று தசாப்தகாலமாக நாட்டியத்துறையில் தனக்கென தனித்துவ இடத்தைதக்கவைத்திருக்கும் நடன ஆசிரியர் 'கலைச்செல்வி' நிர்மலாஜோன் இவ்வாறு கூறுகின்றார்...

 

நான் இக்கலையை கற்க ஆரம்பித்த போது மிகுந்த ஈடுபாட்டுடன் வீட்டில் கூட யாருக்கும் தெரியாமல் இறங்கினேன். நல்ல குருவும் அமைந்து விட ஆத்மார்த்த அன்புடன் மிகுந்த சிரத்தையுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் எனது ஆரம்பப் பயிற்சி தொடர்ந்தது

அதனையடுத்து, எனது பெற்றோர் தொடர்ந்து எனக்கு ஆதரவு தந்து என் ஆசையை தொடர வழிவகுத்தனர். இது எத்தனையோ இளம் பிள்ளைகளுக்கு தம் பெற்றோரால் கிடைக்கும் அரிய வாய்ப்பு. ஆனால், எத்தனை பேர் இதை உண்மையாக கற்று தொடர்கிறார்கள்.

யோகத்தையும் தன்னகத்தே கொண்ட இக்கலை, மனித வாழ்வுக்கு  தேவையான சகல ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கியுள்ளது

இளம் மாணவ, மாணவியருக்கு பரத நாட்டியம் கற்றுத்தந்த வண்ணம்; வாழ்வினை செலவழித்து சில சமயங்களில் சில கோணங்களில் இருந்து இடர்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாது அதையே ஒரு சவாலாக ஏற்று கலைப்பயணத்தை தொடர்கின்றேன்

 

 

02.

சென்னைப்பல்கலைக்கழகத்திலே இசைத்துறையிலே கலாநிதிப்பட்ட ஆய்வை நிறைவுசெய்தவர். மூன்று தசாப்பதங்களாக அரங்கக்கலைஞராக இருப்பவர். யாழ். பல்கலைக்கழகம், இசைத்துறை, முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா  அரவிந்தன் தனது கருத்தை இவ்வாறு பகிர்ந்துக்கொள்கிறார்

 

இசை என்பது கலை என்பதற்கப்பால் மனிதரை மானுடத்துவத்தின் வழி நிலைக்க வைப்பது. இந்த வகையிலே மனிதர்களோடு ஏதோ ஒருவகையிலே இசை இணைந்திருக்கின்றதுதாலாட்டிலிருந்து ஒப்பாரிவரை இசைதொடர்கின்றது, குறிப்பாகப் பெண்களோடு இசை இணைந்திருக்கின்றது

ஆனால், இன்று இந்த இணைவு சற்று விலகிச்செல்வதுபோன்ற உணர்வு என்மனதில். என்னைப் பொறுத்தளவிலே பெண்கள் ஆற்றுகை நிலையிலே இசைத்துறையை எடுத்துச்செல்வது என்பது மிகப்பெரிய சவால்.  

 

 இசைத்துறையிலே ஆற்றுகை நிலையில் பெண்கள் சாதிப்பதற்கு குடும்பத்தின் ஒத்துழைப்பும் ஏற்புடைமையும் மிகவும் அவசியம்.  

 

இசைத்துறை என்கின்ற பொழுது ஆரம்பகாலங்களிலே பெண்கள் மேடை ஏறுவது அழகல்ல என்கின்ற படிமம் இப்பொழுது சமூகங்களிலே அற்றுப்போயிருந்தாலும் பெண்களது தொகைகணிப்பீட்டளவிலே குறைந்து வருவது கவலைக்குரியவிடயம் தான்

கலைச்சமூகத்திலே நிலைக்க வேண்டுமாயின் அல்லது சாதிக்க வேண்டுமாயின் மிகுந்த பயிற்சி அவசியம். குடும்பச்சுமைகளோடு பயிற்சிகளிலே காலத்தைப்போக்க பெண்கள் சற்று சிரமப்படு கின்றார்கள். குடும்பப்பொறுப்பு அவர்களை நிச்சயம் சலிப்படையச்செய்யும்

 

ஒரு பெண் தன்னுடைய கடமைகளைத் திறம்பட செம்மையாக நிறைவேற்றுகின்ற பொழுதுதான் மகிழ்வும், நிறைவும், நிம்மதியுமான குடும்ப வாழ்வை தானும், தன்னுடைய சுற்றத்தாரும் அனுபவிக்க முடியும். இந்த நிலையிலே பெண்கள் தங்களுடைய செயற்பாடுகளையும் பொறுப்புக்களையும் தட்டிக்கழிக்காமல் செம்மையாகத்திட்டமிட்டு செயற்படுவார்களேயானால் வெற்றிகாண முடியும்

சம காலத்திலே இசைஅரங்குகளிலே பெண் கலைஞர்களைக் காண்பது அரிதாகிச்செல்கின்றது. இந்த நிலை மாற்றமடைய வேண்டும்

 

 இன்று சமூகத்திலே காணப்படுகின்ற சவால்களிலிருந்து தம்மைக்காத்து வெற்றிக்கொள்ளவும், மனங்களைச் சமநிலைப்படுத்துவதற்கும் இசை முக்கிய கருவியாகத் தொழிற்படுகின்றது. எனவே பெண்களுக்கு குழந்தைப்பருவத்திலேயே இசைக்கலைக்கு பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.  இசையின் சிறந்த அனுபவத்தை குழந்தைப்பருவத்திலேயே மனதில் விதைப்போமானால் சிறந்த ஒரு எதிர்காலத்தை சமைக்கலாம்

03.

நடன ஆசிரியர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன

நாட்டியத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்களின் அரங்கேற்றத்தினை கண்ட நடன ஆசிரியர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன், மூன்று வயதில் தனது அன்னையை முதற் குருவாகக் கொண்டு பரதத்தை பயிலத்தொடங்கி தசாப்த காலமாக தடைகளின்றி பயணிக்கின்றார்.   

தனது அன்னையின் நாட்டிய தனது அன்னையின் நாட்டிய கலா மந்திரில் பல மாணவர்களின் மத்தியில் இவரும் ஒரு மாணவியாக இருந்து பரதத்தின் மூலாதாரத்தை பயின்றுகொண்டவராவார். தொடர்ச்சியாக பயிற்சி பெற்று ஆர்வத்துடன் இத்துறையில் செயற்பட்ட இவர், இந்தியாவில் 03 வருட பரதப் படிப்பை  ; பயின்று, நாடு திரும்பிய இவரிடம்  தனது அம்மாவினால் 1953ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வந்த 'நாட்டிய கலாலயத்தை'  1976ஆம் ஆண்டு 'நாட்டிய கலாமந்திர்' எனும் பெயரில் பொறுப்பேற்று அன்று முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு குருவாக இருந்து தொடர்ச்சியாக செயற்;பட்டு வரும்  கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் தனது கருத்தை இவ்வாறு பகிர்கின்றார்...

'ஒரு பெண் தனது வாழ்க்கையில் பல அவதாரங்கள் எடுக்க வேண்டும் என்று சொல்லலாம். ஏனெனில் அனைத்து விடயங்களுக்கு பல கதாப்பத்திரங்களாக அதாவது, தாயாகவும், சகோதரியாக , மனைவியாக இவ்வாறு பல விடயங்களை சுட்டிக்காட்டலாம். இவ்வறான அவதாரங்களை கொண்டுள்ள பெண் தொழில் சார் நிடயங்கள் நிர்வாகம் என பல தரப்பட்ட இடங்களிலும் பெரும் சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த சவாலை சமாளிக்க முடியாது ஓடாமல் சமயோசிதமாக செயற்படும் தன்மையை பெண்கள் கொண்டிருக்கின்றனர்

நடனத்துறையை சார்ந்தவராக நான் இருக்கின்றமையால் இந்தத்துறையில் வரும் சவால்களை  ஒரு பெண்ணாக இருந்து எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது பற்றி கூறினால், பெரும்பாலான பெண்கள் நடனத்; துறையை தெரிவு செய்கின்றனர். படிக்கின்றார்கள். ஒரு நல்ல நிலையை எட்டுகின்றார்கள். ஆனால், வாழ்நாள் இறுதி வரையில் அதனை கொண்டு நடாத்துகின்றார்களா? என்பது கேள்விக்குறி. ஏனெனில் பல பொறுப்புக்கள் நிறைந்த பெண்கள் முழுநேரமாக குறிப்பாக திருமணத்தின் பின்னரோ அல்லது பொறுப்புக்கள் அதிகரிக்கும் போது அந்த கட்டத்தில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அத்தருணத்தில் அவர்கள் சில தீர் மானங்களையும் எதிர்க்கொள்ள நேரிடுகிறது

பெரும்பாலான நடன கலைஞர்கள் பாடசாலை ஆசிரியர் மட்டத்திலேயே தனது நடன செயற்பாடுகளை நிறுத்திக்கொள்கின்றனர். சிலர், முழுநேரஃ பகுதி நேர வகுப்புக்களாகவும் சிலர் பூரணமாக ஒதுங்கும் ஒதுங்கும் நிலையும்ஏற்படுகின்றது

ஆர்வம் இருந்தும் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை. சந்தர்ப்ப சூழ்நிலைகள் பல தடங்களை ஒரு புறம் ஏற்படுத்தினாலும் இப்போதுள்ள இளம் தலைமுறையினர் இப்போது கற்பதற்கு பரந்தளவில் இருக்கின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்கள். குருகுல வாசம் குறைந்திருந்தாலும் ஆர்வத்துடன் இந்தத் தலைமுறைப் பெண்கள் சவால்களுடனான இப்பயணத்தை தொடர்கின்றனர். சவால்களை கடந்து சாதனை படைப்போம';. அனைத்து பெண்களுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள


அறிவு, அழகு, ஆளுமை இவை மூன்றும் இருந்தால் சாதிக்கலாம் 

இளம் நடன ஆசிரியர் கலாசூரி திவ்யா சுஜேன்

 படைப்பின் பேரருளால் பல்வேறு பட்ட அழகியல் அனுபவங்களை உள்வாங்கக் கூடியவர்கள் பெண்கள். மென்மைஇ மேன்மைஇ செம்மைஇ தூய்மைஇ தாய்மை எனப் பல நகை அணிந்து ஜொலிக்கும் பெண்கள்  தாம் திண்ணமுற எண்ணியதை நண்ணிப் பெற்றிடத் துணிந்தோர்.

 பெண்களின் அகராதியில் சாவல் என்ற சொல்லுக்கே இடம் தராது  சாதனைகள் செய்திட 3 அடிப்படை விடயங்களை கருத்தில் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்

 அறிவு -ஏழ்மையை வெல்லும் வழி கல்வி என்று உறுதி கொள்ள வேண்டும்.

அழகு.-  உள்ளத்தினையும் உடலினையும் உறுதி செய்ய வேண்டும்

ஆளுமை.- தனைத் தான் ஆளும்  தன்மை பெற வேண்டும். அன்பினால் அகிலத்தை ஆள வேண்டும்.

 மேற்சொன்ன 3 தூண்களும் வலிமை பெற நான்காவது தூணாக சமுதாயம் துணை நிற்க வேண்டும். அது போல் பெண்களின் வாழ்வியல் கோல மாற்றத்தில் குடும்பம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆகவே வான் முட்டும் வண்ண மாளிகையின் அத்திவாரமாக குடும்பம் அமைய வேண்டும்.

 என் வாழ்வியலை தாளம் தப்பாது வரமாக்கிட ஆதார சுருதியானது நாட்டியமே. தமிழ் வந்த பண்டை மரபு தொட்டு நங்கைக்கு  நடம் இருந்தது. எக்காலத்திற்கும் உகந்த அரிய அருமருந்தாக கிடைத்த நாட்டியக் கலையை பாகுபாடின்றி பெண்களிடையே கொண்டு சேர்த்து இனிது இனிது இவ்வாழ்வென உணர்த்துவதே அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் சேவையும் கூட.

 கணந்தோறும் கொட்டிக்கிடக்கும் இன்பங்களை கொண்டாடி வாழும் நிலையைப் பெண்கள் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து மகளிர் தின வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

 பெண்களையும் வாழ்க்கையையும் புரிய முயல்வதை விட அனுபவிக்க வேண்டும் என்று ஜென் குருமார் சொல்வர்

பத்தாவது வயிதிலேயே சக்தி சுப்பர் ஸ்டார் 

மகுடத்தை சூடிக்கொண்ட வைஷாலினி 

2014ஆம் ஆண்டு தனது பத்தாவது வயதில் சக்தி சுப்பர் ஸ்டார் என்ற மகுடத்தை தனதாக்கிக் கொண்ட வைஷாலினி யோகராஜன் இளம் வயது கலைஞராக உள்ளுரில் மாத்திரம் அல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் வலம் வருகின்றார்பாடசாலை மாணவியாக தனது ஆளுமைகளை வெளிபடுத்திவரும் இவர் இசைத்துறையிலும் தனக்கென தனியிடத்தை பெற்று பல மட்டப்போட்டிகளில் வெற்றி வாகை கூடிவரும் வைஷாலினி யோகராஜன் இன்றைய மகளிர் தினத்தில் இவ்வாறு தனது சவால்களுடனான சாதனைப் பயணத்தைப்பற்றி....

ஒரு சிறுமியாக மாணவியாகஇருந்த நான் சக்தி சுப்பர்ஸ்டார் நிகழ்வில்பங்குபற்றிக் பல சுற்றுக்களை கடக்கும் அதே காலகட்டத்தில் தமிழ்த்தின தேசியப் போட்டிகளில் பங்கு பெறவேண்டிய கட்டாயம்

அத்தருணத்தில் பல மட்டங்களிலும் போட்டியிட்டு தேசிய மடட்டத்திலும் முதலிடம் பெற்றுக்கொண்டேன்போட்டி நிகழ்வுகள் ஆரம்பித்த சில நாட்களில் உணவு உண்பதற்கோ அல்லது நித்திரை செய்வதற்கோ எனக்கு மனம் இடம்கொடுக்கவில்லைதொடர்ச்சியாக எனது பெற்றோர்கள்உறவினர்களின் ஊக்குவிப்பு முழுமையாக முழுமனதோடு உழைத்தற்காக அதே ஆண்டில் சக்தி ஜுனியர் சுப்பர் ஸ்டார் மகுடமும் தேசிய மட்டப்  போட்டியில் தங்கப்பதக்கமும் பெறக்கூடியதாக இருந்தது

கல்வியோடு கலைத்துறையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றேன்வாய்ப்பாட்டுபரதம்வயலின் ஆகிவற்றுடன் ஆரம்பித்த எனது கலைப்பயணம் கர்நாடக இசைத்துறையில் பங்குபற்றி வருகின்றேன்

தொடர் முயற்சி சிறந்த இசைப்பாடகிக்கான இலங்கை அரசின் ஜனாதிபதி விருதையும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு தடைகளின்றி பயணிக்கின்றேன்

 

 



You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images