மூத்த முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன் உடனான நேர்காணல் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உயரிய தேசிய விருதான ''சாஹித்ய ரத்னா'' விருது நீர்வை பொன்னையனுக்கு கிடைத்ததல்ல. இது எங்களது முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கும் எனது கொள்கைக்கும் கிடைத்த விருது. நான் அரசியலில் இருந்து இலக்கியத்துக்கு வந்துள்ளேன. இலக்கியத்தில் இருந்து அரசியலுக்கு வரவில்லை. எனது அரசியல்பயணம் 1947 இல் ஆரம்பமானது. இலக்கியப்பயணம் 1957 இல் ஆரம்பித்தது... என்று பேசத் தொடங்குகிறார் மூத்த முற்போக்கு எழுத்தாளர் 'சாஹித்ய ரத்னா' நீர்வை, பொன்னையன்... ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான நீர்வை பேனாவை ஆயுதமாகக் கொண்ட...
அரசியல் என்றாலே ஊழலும் இருக்கும் என்பது பொது மொழியாகிப்போன ஒன்றாகி கிடக்கின்றது. அரச பொது நிதிகளை கையாளும் அதிகாரம் ஆட்சியாளர்கள் வசம் வரும்போது இன்னும் பல அதிகாரங்களும் அவர்களுக்கு வருவதனால் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உருவாகி விடுகின்றன. மேலைத் தேய நாடுகள், ஆசிய நாடுகள் என எல்லாவற்றிலும் இது இடம்பெற்றாலும் மேலைத்தேய நாடுகளில் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுக்கள் வரும்போது குறித்த அரசியல்வாதி அவர் வகிக்கும் பதவியில் இருந்து விலகுவார். ஆசிய குறிப்பாக தென்னாசிய நாடுகளில் அந்த பதவியில் இருந்தவாறே தங்களைச் சரிப்படுத்தவும் அரசியல்வாதிகள் முயற் சிப்பர். மிகப்பொறுப்புமிக்க...
உத்தேச அரசியல் யாப்புக்கு எம்.பி.க்கள் ஆதரித்து வாக்களிப்பார்களாயின் பாராளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அண்மையில் கூறியுள்ள கருத்து ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கியுள்ள அதேவேளை அநாகரிக அரசியலுக்கு அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகவும் உள்ளது. குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டும் என்று விமல் ஒரு பக்கம் கூறியுள்ள நிலையில் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, விமல் கூறியதுபோல் ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பயன்படுத்த வேண்டும் என கூறியிருப்பதன் மூலம் குண்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருப்பதானது ஆச்சரியமானதாக இருக்கின்றது. ...