"மின்னும் தார­கைகள்" நூல் ஆசிரியர் பேசுகின்றார் - ஜீவா சதாசிவம்

November 08, 2018


சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளரும் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தின் ஓய்­வு­நிலை தகவல் அதி­கா­ரியும் படைப்­பி­லக்­கி­ய­வா­தியும் அரச அங்­கீ­கா­ரம்­ பெற்ற சிங்­க­ள -­– தமிழ் மொழி­பெ­யர்ப்­பா­ள­ரு­மான கலா­பூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்கள் பற்­றிய ஆய்வு திரட்டான "மின்னும் தார­கைகள்"   எனும் நூல்  எதிர்­வரும் 11ஆம் திகதி வெளி­யிடப்படவுள்ளது. இந்நிலையில், இந் நூலாக்க முயற்சி அவரது இலக்கியப்பயணம் பற்றியதான விடயங்கள் தொடர்பில் கலந் துரையாடக்கிடைத்தது. இதன்போது அவர் எம்முடன் பகிர்ந்துக்கொண்ட விடயங்கள் வாசகர்களுக்காக...

உங்­க­ளது  எழுத்­து­லகப்  பிர­வேசம்பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
எனது எழுத்­து­லகப் பிர­வேசம் 1975ஆம் ஆண்­டி­லி­ருந்தே ஆரம்­ப­மா­னது. பாட­சா­லையில் உயர் வகுப்பு படிக்கும் போதே வானொ­லிக்கும் பத்­தி­ரி­கை­க­ளுக்கும் ஆக்­கங்கள் எழு­து­வதை எனது முக்­கிய பொழு­து­போக்­காகக் கொண்­டி­ருந்தேன். அன்று ஏற்­பட்ட அந்த எழுத்­து­லக மோகம் என்னை  அன்­றைய ஜன­ரஞ்­சக பத்­தி­ரி­கை­க­ளான "தின­பதி – சிந்­தா­மணி" அலு­வ­ல­கத்­துக்கு கொண்டு போய் சேர்த்­தது. 

1980ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி ஒரு பயிற்­சிப் ­பத்­தி­ரி­ கை­யா­ள­ராக "தின­பதி- – சிந்­தா­மணி" அலு­வ­ல­கத்­துக்கு சென்ற நான் அந்த அலு­வ­லகம் 1990ஆம் ஆண்டு மூடப்­படும் வரை அங்­கேயே கட­மை­யாற்­றினேன். பத்­தி­ரிகை உலக ஜாம்­பவான் என்று போற்­றப்­படும் எனது பத்­தி ­ரிகை உலக தந்­தை­யான எஸ்.டி.சிவ­நா­யகத்தின் ஒரு மாண­வி­யாக மட்­டு­மல்ல, மக­ளாக நான் பெற்ற பயிற்­சி­கள்தான் இன்று வரை இத்­து­றை­யி­லேயே என்னை நிலை­நி­றுத்­தி­ன எனலாம். அந்தப்  பத்­தி­ரிகை அலு­வ­லகம் மூடப்­பட்­டதும் எனது துறைக்கு நான் முற்­றுப்­புள்ளி வைக்­க­வில்லை. இன்றும் எனது எழுத்­து­லகப் பயணம் தொடர்ந்து செல்­கின்­றது. 

இலங்கை முஸ்லிம் பெண் எழுத் தாளர்கள் பற்றிய தொகுப்பை வெளி­யிட உங்­க­ளுக்கு ஏற்­பட்ட ஆர்வம் குறித்து எம்­முடன் பகிர்ந்துகொள்ள முடி­யுமா? 

சுமார் 11 வரு­டங்­க­ளுக்கு முன்னர் என் மனதில் தோன்­றிய ஆசைதான் இது. 2007ஆம் ஆண்டு இலங்­கையில் நடை­பெற்ற உலக இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநாட்டில் மகளிர் அரங்கில்  சமர்ப்­பிப்­ப­தற்­காக "இலங்கை முஸ்லிம் பெண்­களின் ஊட­கப்­பங்­க­ளிப்பு” என்ற தலைப்பில் ஆய்­வுக்­கட்­டுரை ஒன்றை எழுதும் சந்­தர்ப்பம் எனக்குக் கிடைத்­தது. இந்த ஆய்­வுக்­காக தக­வல்­களை திரட்டும் போதுதான் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்கள் பற்­றிய ஆய்வு நூல் ஒன்றை எழுத வேண்டும் என்ற ஆசை என் உள்­ளத்தில் துளிர் விட்­டது. நீண்ட நாள் கன­வுதான் சுமார் 11 வரு­டங்­களின் பின்னர் இப்­போது  நன­வா­கி­யுள்­ளது.

இத் தொகுப்பில் இலங்­கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்­களும் உள்­ளடங்குகின்­றார்­களா? 
இலங்­கை யிலுள்ள அனைத்து முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்ளேன் என்று எனக்கு உறு­தி­யாகக் கூறி­விட முடி­யாது. அவர்­களில் ஒரு சிலர் விடு­பட்­டி­ருக்­கலாம். இன்னும் சிலர் தமது தக­வல்­களைத் தரு­வதில் அச­மந்தப் போக்கைக் கடைப்­பி­டித்­தனர்.   சுமார் 140 முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்­களை இனங்கண்­டுள்ளேன். 

இலங்­கை­யி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து கடல் கடந்து வாழும் இலங்­கை­யைச்­சேர்ந்த ஒரு சில பெண் எழுத்­தா­ளர்­க­ளையும் இந் நூலில் உள்­வாங்­கி­யுள்ளேன். எந்த ஓர் ஊடக விளம்­ப­ர­மு­மின்றி மேற்­கொண்ட  என­து இந்த ஆய்வு நட­வ­டிக்கை இந்த­ளவு பெரு­வெற்­றியைத் தந்­தமை குறித்து மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். 
 இலங்கை முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்­க­ளைப் ­பற்றி மட்­டுமே எழு­தப்­பட்ட நூற்­றுக்கும் மேற்­பட்ட பெண் எழுத்­தா­ளர்­களின் தக­வல்­க­ளுடன் வெளி­வரும் முத­லா­வது ஆய்வு நூலாக இது திகழ்­கி­றது. 

இந்த ஆய்வு நூலுக்­கான தக­வல்­க ளை எவ்­வாறு சேக­ரித்­தீர் கள்? எவ்­வ­ளவு காலம் சேக­ரித்­தீர்கள்?
நூலுக்­கான தக­வல்­களைப் பெறும் நட­வ­டிக்­கை­களை  2017 ஆம் ஆண்டு இறு­தியில் ஆரம்­பித்தேன். மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்­வ­தேச மகளிர் தினத்­தன்று இந்த நூலை வெளி­யிட்டால் மிகச்­சி­றப்­பா­கவும் பொருத்­த­மா­கவும் இருக்கும் என்று கரு­தியே இம்­மு­யற்­சியை ஆரம்­பித்தேன். ஆனால் தக­வல்­களை பெறு­வதில் ஏற்­பட்ட தாம­தத்­தால் தான் இந்த விழாவை நடத்த இவ்­வ­ளவு கால­மெ­டுத்­தது. 

இலங்­கையில் எந்­தெந்த பகு­தி­க­ளி­லெல்லாம் நூல்­களை வெளி­யிட்ட முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்கள் இருக்­கி­றார்கள்? அவர்கள் வெளி­யிட்ட நூல்கள் எவை? நூல்­களை வெளி­யி­டா­விட்­டாலும் இலக்­கிய உல­குக்கு காத்­தி­ர­மான பங்­க­ளிப்புச் செய்து ஓயாது எழு­திக்­கொண்­டி­ருக்கும் முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்கள் யார்?   

முதலில்  எனக்குத் தெரிந்த முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்­க­ளுடன் தொடர்பு கொண்டு அவர்­க­ளது தக­வல்­களைப் பெற்­றுக்­கொண்டேன்.   "கல் மரத்தில் நார் உரிப்­பது" போல்தான் சிலரின் தக­வல்­களை சிர­மப்­பட்டே பெற்றேன். சுமார் ஒரு வருட கால எனது ஆய்வின் அறு­வ­டைதான் இந்த "மின்னும் தார­கைகள்".



இத் ­தொ­குப்­பு­களை செய்யும் போது உங்­க­ளுக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­கள் பற்றி..?
 அனு­ப­வத்தில்  பாதியை மேலே கூறி­விட்டேன். இன்னும் சொல்­வ­தாக இருந்தால் முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்­க­ளி­டையே இந் நூலில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள அனை­வ­ரி­டத்­திலும் ஒவ்­வொரு திறமை இருப்­பதைக் கண்டு நான் வியந்­து­போனேன்.  இத் தேடலின் போது நான் சந்­தித்த எமது ஒரு­சில பெண் இலக்­கிய ஆளு­மை­களைக் கண்டு உண்­மை­யி­லேயே நான் பிர­மித்­துப்­போனேன். இலை­ம­றை ­கா­யாக மட்­டு­மல்ல, இலக்­கியக் கனி­க­ளா­கவும் பலர் இருக்­கின்­றனர். மேகங்­களால் மறைக்­கப்­பட்ட தார­கை­க­ளா­கவும் இன்னும் சிலர்  இருக்­கின்­றனர். 

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்­க­ளி­டையே  நல்ல கவித்­து­வ­மிக்க பெண்கள், சிறு­கதை புனையும் பெண்கள்,  நாவல்­களை எழுதும் பெண்கள் என பல்­துறை ஆளு­மை­மிக்க பெண்கள் இருக்­கின்­றனர் என்­பதை நினைக்கும் போது இதயம் இனிக்­கி­றது. இவர்­க­ளி­டையே காணப்­படும் அபா­ரத்­தி­ற­மைகளும் ஆளு­மையும் உண்­மை­யி­லேயே என்னை மலைக்க வைத்­தன 

உங்­க­ளது தொகுப்பில் ஏன் முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்­களை மாத்­திரம் தெரிவு செய்­துள்­ளீர்கள்?
முஸ்லிம் அல்­லாத  தமிழ்ப் பெண் எழுத்­தா­ளர்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் பற்­றிய பல்­வேறு ஆய்வு நூல்கள் வெளி­வந்­துள்­ளன. எனினும் தமிழ்ப் பெண் எழுத்­தா­ளர்­களைப் பற்­றியும் எழு­து­வ­தற்கு ஆசைதான். வளங்கள் வேண்­டுமே... அது மட்­டு­மல்ல, இலங்கை முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்கள் நதி என்றால் இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்­தா­ளர்கள் சமுத்­திரம் என்பேன். எனவே இந்த சமுத்­தி­ரங்­க­ளைப்­பற்றி எழு­து­வ­தற்கு  எனக்கு வளங்­களும் போதாது. வயதும் போதா­தென்று நினைக்­கிறேன். 

ஆனால், இலங்கை முஸ்லிம் பெண் எழுத்­தா­ளர்கள் பற்­றிய பரந்த அள­வி­லான ஆய்வு நூல் ஒன்று இது­வரை காலமும் வெளி­வ­ர­வில்லை என்­பதும் இவர்கள் பற்­றிய எந்த ஒரு பதிவும் இல்லை என்­பதும் சான்­றோர்கள் பலரின் குற்­றச்­சாட்டு மட்­டு­மல்ல, ஆதங்­க­மும்தான். அத்து­டன் ஒவ்­வொரு முறையும் உலக இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய மாநா­டுகள் நடை­பெறும் காலங்­களில் இது­பற்றி அனை­வரும் பிரஸ்­தா­பிப்­ப­துண்டு. ஆனால் இந்த பணி­யைச்­செய்ய எவரும் துணிந்து முன்­வ­ர­வில்லை.

ஒரு முஸ்லிம் பெண்­ணாக இருக்கும் நீங்கள் உங்­களை எப்­படி  எழுத்­து­லகில் தக்க வைத்துக் கொள்­கின்­றீர்கள்?
எல்­லா­வற்­றுக்கும் அதிர்ஷ்­டமும் வேண்டும். துறைசார் துணைவர் ஒருவர் எனக்கு கண­வ­ராக அமை­யப்­பெற்­ற­மைதான் அந்த அதிர்ஷ்டம் என்பேன். திரு­மணம் பல பெண் எழுத்­தா­ளர்­களின் எழுத்­து­க­ளுக்கு கை விலங்கு போட்­டது என்­கி­றார்கள். ஒரு சில பெண் எழுத்­தா­ளர்­களைப் பொறுத்தவரை அது நிதர்­ச­ன­மான உண்மை தான்.  ஆனால் என்னைப் பொறுத்­த­வரை திரு­மணம் எனக்கு பூவி­லங்கு போட்­டது என்பேன். எனது எழுத்­து­க்க­ளுக்கு மட்­டு­மல்ல, எனது திற­மை­க­ளுக்கும்  நீர் வார்த்து உர­மு­மிட்­டது திரு­ம­ணம்தான்.  

இந்த வெற்­றியின் பெருமை முதலில் எனது பத்­தி­ரி­கை­யு­லகத் தந்தை எஸ்.டி.சிவ­நா­யகத்தைச் சாரும்.   இல்­ல­றத்தில் நுழைந்த பின்னர்  எனது கண­வரை அலு­வ­ல­கத்­துக்கு அழைத்த எஸ்.டி.எஸ். ஐயா அவர்­கள்,- “­நண்­பரே... உங்கள் மனைவி ஊடகத்துறை­யி­லும்-­ எ­ழுத்­துத்­து­றை­யிலும் நன்கு ஜொலிப்­பவர். இத்­து­றையில் அவ­ருக்கு சிறந்­ததோர் எதிர்­கா­ல­முண்டு. எனவே அவரை தொடர்ந்தும் அலு­வ­லகம் அனுப்பி வையுங்கள்” என்று கூறி ஆசி­யுரை பகர்ந்தார். பத்­தி­ரிகை உலக ஜாம்­பவான் சிவ­நா­யகத்தின்  எதிர்வு கூறலை இன்றும் நான் நன்­றி­யுடன் நினைவு கூர்­கிறேன். அவ்­வாறே எனது இல்­ல­றத்தில் மட்­டு­மல்ல, இலக்­கி­யத்­திலும் எனக்கு பக்­க­ப­ல­மாக இருக்கும் எனது வாழ்க்கை துணை­வரின் துணையை  எண்ணி மகிழ்­கிறேன்.  

உங்­க­ளது ஏனைய இலக்­கிய படைப்­புக்கள் பற்றி? 
எனது முத­லா­வது நூல் "தின­பதி – சிந்­தா­மணி" பத்­தி­ரி­கை­களில் நான் எழு­திய கட்­டு­ரை­களின் தொகுப்பாக 1997ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதி "பண் பாடும் பெண்" என்னும் பெயரில் வெளி­வந்­தது.  அண்­மையில் நான் எனது அரச சேவை­யி­லி­ருந்து ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்தே தேங்கிக் கிடந்த எனது இலக்­கிய முயற்­சி­களை முன்­னெ­டுக்கும் சந்­தர்ப்பம் எனக்கு கிடைத்­தது. 

இதனால் தான் வீடு முழு­வ­திலும் நிரம்­பிக்­கி­டந்த எனது கணவர் நஜ்முல் ஹுசைனின் கவி­தை­க­ளை­யெல்லாம் திரட்டி "நஜ்முல் ஹுசைனின் நட்­சத்­திரக் கவி­தைகள்'" என்ற ஒரு தொகுப்பை கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வெளி­யிட்டேன். அடுத்து எனது கவிதை தொகுப்பு "பூஞ்­செண்டு" என்ற பெயரில் நூலுருப் பெற்­றது. அதை­ய­டுத்து தான் இந்த  "மின்னும் தார­கைகள்.” இவைதவிர உலக இஸ்­லா­மிய இலக்­கிய மாநாட்டில் நான் சமர்ப்­பித்த "இலங்கை ஊட­கத்­து­றையில் முஸ் லிம் பெண்­களின் பங்­க­ளிப்பு" என்ற ஆய்வுக் கட்­டு­ரையும் கொழும்பு பல்­க­லைக்­க­ழக பத்­தி­ரி­கைத்­துறை டிப்­ளோமா பாட­நெ­றிக்­காக என்னால் சமர்ப்­பிக்­கப்­பட்ட "எயிட்ஸ் நோயும்- பெண்­களும்" என்ற ஆய்­வுக்­கட்­டு­ரையும்   நூலு­ருப்­பெற தயா­ராக உள்­ளன. 

அத்­தோடு உடுவை எஸ்.தில்லை நட­ரா­ஜாவின் "கடற்­கன்னி", "மந்­தி­ரக்­கண்­ணாடி", "பேசும் பேனா" போன்ற மூன்று சிறுவர் நூல்களையும் சிங்­கள மொழியில் மொழி­பெ­யர்த்­துள்ளேன். எனது கணவரின் புதுக்கவிதைகளை தற்சமயம் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறேன். இறைவன் நாடினால் அந்த சிங்கள மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுப் பும் நூலாக வெளிவரும் 

எதிர்வரும் 11 ஆம் திகதி நடை பெறவுள்ள உங்களது நூல் வெளி யீட்டு நிகழ்வுகளின் சிறப்பு பற்றி?
இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய எனது ஆய்வு நூலான "மின்னும் தாரகைகள்" மூன்றுஅத்தியாயங்களுடன் 460 பக்கங்களுடன் ஒரு காத்திரமான நூலாக வெளிவருகிறது.    கொழும்பு – சங்கராஜ மாவத்தை யில் அமைந்துள்ள அல் –ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலய பஹார் தீன் மண்டபத்தில் இந் நிகழ்வு நடை பெறவுள்ளது. மலையகத்தின் முன்னணி எழுத் தாளரான கலாபூஷணம் நயீமா சித்தீக் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் முன்னாள்  அமைச்சர் ரவூப் ஹக்கீம்  பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். 

அது மாத்திரமன்றி சிறப்பதிதிகள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இந்த விழா வில் இந் நூலில் இடம்பெற்றுள்ள  எழுத்தாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதே என் வேணவா!  இலக்கிய  நண்பர்கள்  உட்பட அனைவருக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

நன்றி வீரகேசரி- சங்கமம் (03/11/2018)

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images