இலங்கையின் தமிழ் சினிமாத்துறை என்பதே பிழையான வார்த்தைப் பிரயோகம் - ஜீவா சதாசிவம்

இலக்கியம் March 26, 2018
ஊடகத்துறையில் சிறந்த ஆளுமையாகவும் ஊடகத்துறையின் விரிவுரையாளராகவும் வலம் வந்தவர் தான் நடராஜா மணிவாணன். மலையகத்தின் பண்டார வளையை பிறப்பிடமாகக் கொண்டு தனது கல்வியையும் தனது பிறப்பிடத்திலேயே பெற்றுக்கொண்ட மணிவாணன் தற்போது இளம் இயக்குனராகவும் வலம் வருகின்றார்.   அதன் முதலாவது அடையாளமாக  'முதற்கனவே' தொலைக்காட்சி குறுந்தொடரை குறிப்பிடலாம்.  தான் என்றாவது ஒரு நாள் இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்று சுமார் எட்டு வருட கால மனப்போராட்டத்தின் மத்தியில் இடைவிடாது செய்த முயற்சி எட்டு மாதங்களில் கைகூடியுள்ளது.  ஆம்... அவரது  'முதற்கனவே' என்னும் முதன்மை தமிழ் மொபைல் தொலைக்காட்சிக் குறுந்தொடர் ...

குணபதி கந்தசாமியின் 'இதுகாலம்' ஜீவா சதாசிவம்

கட்டுரை March 26, 2018
யாழ். மானிப்பாயைச் சேர்ந்தவரும் தற்போது சுவிஸில் புலம் பெயர்ந்து வசித்துவருபவருமான கலைஞர் குணபதி கந்தசாமியின் இயக்கத்தில் உருவான 'இதுகாலம்' எனும் முழு நீள தமிழ்த்திரைப்படம்  நேற்று  நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 15 திரையரங்குகளில் வெளியானது.  இலங்கையைச் சேர்ந்த  குணபதி கந்தசாமி    1983 ஆம் ஆண்டளவில் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் தற்போது வசித்து வருகின்றார். இலங்கையில் தயாரிக்கப்பட்டு மிகவும் பிரசித்திபெற்ற தமிழ்த்திரைப்படமான செங்கையாழியானின் தயாரிப்பில் உருவான 'வாடைக்காற்று' திரைப்படத்தின்மூலம்  வில்லன் கதாபாத்திரத்தில் இலங்கை தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமான கலைஞர் இவர். அதன் பின்னர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட...

'கண்டிச்சீமை' நாவல் வெளியீட்டில் நூல் பற்றி அறிமுக உரை - ஜீவா சதாசிவம்

இலக்கியம் March 24, 2018
புலம்பெயர் எழுத்துக்கள் எதிர்காலத்தில் தமிழ் இலக்கிய பரப்பில்  முன்னணியில் இருக்குமென மூத்த முற்போக்கு எழுத்தாளர்  எஸ். போ அவர்கள் கூறியது உண்மை என்பதை புலப்படுத்தும் வகையில்,  புலம்பெயர் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக சிறப்பான படைப்புக்களை தந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான படைப்புக்களை தந்து கொண்டிருப் பவர்களில் மாத்தளை சோமுவும் இங்கு குறிப்பிடத்தக்கவர். எண்பதுகளில் மலையகத்தில் உருவான எழுத்தாளர்களுள் மாத்தளை சோமு முக்கியமானவர்.  சோமசுந்தரம் எனும் தனது இயற்பெயரை மாத்தளை சோமு எனும் மலையக மண்வாசனையுடன் இணைத்துக்கொண்டு இன்று அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழுகின்றார். 1983இல் மாத்தளை பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்துடன் இந்தியாவுக்கு...

நம்பிக்கை இல்லா பிரேரணை வருமா? - ஜீவா சதாசிவம்

அலசல் March 23, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை இல்லாப்பிரேரணை இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. தேர்தல்கள் முடிந்த கையோடு நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி யான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேரடியாகவே  ரணில் விக்கிரமசிங்க  பிரதமராக இருக்கும் அரசாங்கத்தில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை எனும் தொனிப்பட பேசி வந்தது.  எனினும், ஒருவார கால இழுபறியின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்ற உறுதிப்பாடு பாராளுமன்றத்தில் ஏற்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் நேரடியாகவே நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்வதாக பாராளுமன்றத்தில் அறிவித்தனர். இந்தக்காட்சி முடிவடைந்த கையோடு...

நான்கு நாவல்களுக்கு FAIRWAY விருது - ஜீவா சதாசிவம்

இலக்கியம் March 22, 2018
இலங்கையில் இலக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கின்ற பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பெயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனம் மூன்றாவது வருடமாக நடத்திய 'காலி இலக்கிய விருது விழா'  கடந்த மாதம் 26 ஆம் திகதி காலியில் நடைபெற்றது.   அன்றைய தினம் மாலை 7 மணிமுதல் 8.30 மணிவரை இவ்விழா இடம்பெற்றது. நேர ஒழுங்கமைப்பிற்கேற்ப சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் மங்கள சமர வீர நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  இவ்விருதுக்கு நடுவர்களால் மூன்று மொழிகளிலும் 13 நாவல்கள் தெரிவுசெய்யப்பட்டன. இதற்கமைய தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறையே...

மாத்தளை சோமுவின் இலக்கிய பயணம் - ஜீவா சதாசிவம்

இலக்கியம் March 17, 2018
தோட்டக்காட்டினிலே.... தொடங்கி சிட்னி தமிழ் எழுத்தாளர் சங்கம் வரையான மாத்தளை சோமுவின் இலக்கிய பயணம் இன்று 'கண்டிச் சீமை' எனும் வரலாற்று நாவலுடன் மீண்டும் இலங்கை மலையகப்பக்கம் திரும்பியுள்ளது.  மாத்தளை மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மலையக எழுத்தாளர் மாத்தளை சோமு கண்டிச்சீமை நாவல் வெளியீட்டிற்காக இலங்கை வந்துள்ளார். அவருடனான ஓர் இலக்கிய உரையாடல்... மாத்தளையில் வாழ்ந்த பள்ளிப்பருவம்முதல் இளமைக்காலம் வரையான உங்கள் வாழ்க்கைப்பதிவுகளையும் இலக்கிய ஈடுபாட்டையும் அறிமுகக் குறிப்பாக கூறுங்களேன்...  மாத்தளையில் விஜயாக் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் கல்வி கற்றபோது அங்கு ஆசிரியராக இருந்த யாழ்ப்பாண ஆசிரியர்களால்...

இலக்கிய ஆளுமைகள் சிலருடன்.... ஜீவா சதாசிவம்

இலக்கியம் March 12, 2018
பெண்களின் தலைமைத்துவம்,  துறைசார் விடயங்கள் அதனுடனான அனுபங்கள் பற்றி பேசும் போது நேரடியாகவே  ஒரு குரல் எழும். அதாவது ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் சாதித்து தலை நிமிர்வதென்பது சவாலான விடயம் என்பதே பலரது கருத்து. ஆனால், பெண்களின் சாதனைக்கு அல்லது அவர்கள் முன்வருவதற்கு தடையாக ஆண்கள் மட்டுமா? இருக்கின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். ஏனெனில் அலுவலகங்கள், பொதுத்தளங்கள், சமூக மட்டம், உட்பட பல தளங்களிலும்  எத்தனை பெண்கள்  தமது பெண்ணினத்துக்கு உதவுபவர்களாக இருந்திருக்கின்றனர் என  சிந்திக்க  வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஒரு பெண்னை பற்றி இன்னொரு பெண்...

மகளிர் அரசியலில் மாற்றமா? ஏமாற்றமா? - ஜீவா சதாசிவம்

அலசல் March 12, 2018
இன்று சர்வதேச மகளிர் தினம். 'இதுதான் நேரம்' (Time is Now) என்பது 2018ஆம் ஆண்டுக்கான மகளிர் தின தொனிப்பொருள்.  இந்த தருணம் இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்றதனடிப்படையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 25% ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மகளிர் அரசியலில் மாற்றமா? ஏமாற்றமா? என்பது பற்றி பேசவேண்டியுள்ளது.  இலங்கை உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை பெற்றுக்கொடுத்த ஜனநாயக நாடு என பெயர் பெற்றது. அவர் சிறிமாவோ பண்டாரநாயக்க. அதேபோல உலகிலேயே முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க பெண் ஜனாதிபதியையும் பெற்றுத்தந்த நாடு இலங்கையாகும். அவர் சந்திரிகா...

அரசியல் - சினிமா அரசியல் - ஜீவா சதாசிவம்

அலசல் March 09, 2018
அரசியல்வாதி என்ற ஒருவரை கண்முன்னே கற்பனை செய்கின்ற ஒருவருக்கு தவிர்க்கமுடியாத வகையில் தொப்பைவயிறும் சொட்டைத்தலையும் வெள்ளை ஜிப்பாவும் என பரவலாக தோன்றி விடுகிறது. பத்திரிகைகளில் இப்படியான தோற்றத்துடன் ஒரு கார்ட்டூன் வெளிவந்தால் அது அரசியல்வாதிகளைக் குறிப்பதாக ஒரு நினைப்பு வந்துவிடுகிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் தான் இந்தத் தோற்றப்பாடு.  இது மாத்திரமல்ல, தெற்காசிய கலாசாரங்களில் ஒன்றாக குடும்ப அரசியல், வாரிசு அரசியல், பிரபல (Popularity) அரசியல், என ஒரு அரசியல் கலாசாரம் இருப்பது போல 'சினிமா அரசியல்' என்ற ஒன்றும் தொற்றிக்கொண்டுள்ளது. உலகநாடுகளில் கூட இந்த சினிமா பிரபலத்தின்...

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images