வானொலியில் உங்களது பிரவேசம், அதன் அனுபவம் பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? இளம் வயதிலிருந்தே ஊடகத்துறையில் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. 1969 ஆம் ஆண்டு "தினபதி"யில் இணைந்தேன். அப்பத்திரிகையில் பணிபுரிந்த மூத்த ஊடகவியலாளர் ரத்தினம் என்னுடைய தமிழ் ஆளுமை, பேசுகின்ற விதம் போன்ற பல விடயங்களை அவதானித்து பத்திரிகைத்துறையை விட ஒலிபரப்புத்துறைக்கு பொருத்தமான ஆளுமை இருக்கின்றது என என்னை வழிகாட்டினார். அதற்கமைய 1971 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒலிபரப்புப் பணியில் சேர்ந்த முதல் வாரத்தில் ஒரு நாள்... கொழும்பு–7, கூட்டுத்தாபன பயிற்சிப் பிரிவின் மேல் மாடியில் ...
பதுளை ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் தோட்டப் பராமரிப்பாளராக தொழில் புரியும் நாட்டாரியல் கலைஞர் விமலநாதன் யாழில் "நாட்டாரியல் நட்சத்திரம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நாட்டாரியல் கலைஞர் விமலநானுக்கு யாழில் கடந்த வாரம் யாழ். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தால் “மலையக நாட்டாரியல் நட்சத்திரம்”என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது . யாழ்.நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற “அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்கள்”வெளியீட்டு விழாவிலேயே விமலநாதன் கௌரவிக்கப்பட்டதோடு மேற்படி விருதும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விமலநாதனின் நாட்டார் பாடல்களும் சபையினரின் கைத்தட்டல்களோடு இடம்பெற்றன. அண்மையில் கந்தப்பளை சென்றிருந்தபோது தற்செயலாக...
இளம் வயதிலேயே தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு உழைத்த மூத்த படைப்பாளியான என்.கே.ரகுநாதன் சிறந்த இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவராவார். "கம்யூனிஸ்ட்" மு. கார்த்திகேசன், - பொன். கந்தையா ஆகியோரின் வழிகாட்டலில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்ட இவர், 1964 ஆம் ஆண்டளவில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்தபோது தோழர் என்.சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு அணியில் இணைந்து செயற்பட்டார். இலங்கைப் பாராளுமன்றம், - சீன வானொலி, -லண்டன் பிரிவுக்கவுன்சில் நீதிமன்றம் வரை பேசப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயப்பிரவேசப் போராட்டம் முதல் வட இலங்கையில் தீண்டாமைக்கெதிராக நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும்...
வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய பழைய மாணவர் சங்கம் தனது வெள்ளிவிழா ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ள இத்தருணத்தில் தனது ஆண்டு விழாவை எதிர்வரும் 16ஆம் திகதி சினமன் லேக்சைட் ஹோட்டலில் மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. 1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் தொடர் ஒரே குழுமத்துடன் இயங்கி இற்றைவரை காலமும் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை நோக்கி ஒவ்வொரு கட்டத்தையும் முன்னெடுத்தச் செல்கின்றது. அந்தவகையில் சங்கத்தின் கடந்த காலத்தை மீட்டிப்பார்ப்பதாக இக்கட்டுரை அமையும். 1982ஆம் ஆண்டு செயற்பட்டுக் கொண்டிருந்த பழைய மாணவர் சங்கமானது ஏறத்தாழ 13 ஆண்டுகளின் பின்...
காலம் மெய்ப்பித்திருக்கும் ஒரு புதிய இலக்கியக்குரல் ‘மல்லிகை ஜீவா என்றே பெரிதும் அறியப்பட்ட டொமினிக் ஜீவா’ வின் ஆத்மக்குரல். அதைத் தான் மகத்துவம் என்று குறித்தேன். மார்க்சியக் கலை இலக்கியக் கோட்பாட்டோடு ஒன்றித்து நிற்பவர்கள், ஓரளவு சார்ந்து நிற்பவர்கள், மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள் போன்று அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பரந்த நிலையில் இயங்குவதற்கான ஒரு அணியை மல்லிகையூடாகக் திரட்டிக்கொண்ட மகத்துவம் அவருடையது. அதை வளர்த்தெடுத்த மகத்துவம் அவருடைய மல்லிகையுடையது. இதற்கான காரணமே டொமினிக் ஜீவா முதலில் ஒரு படைப்பாளி, எழுத்தாளர். ‘எழுத்துலகில் இருந்தே மார்க்சியத்துக்கு வந்தவர் ஜீவா’ என்று...
40 மணிநேர நீண்ட தொடரிசை மூலம் (இசை மரதன்) இசைத்துறையில் உலக சாதனை படைத்த முதலாவது இலங்கையரும் தமிழருமான பிரபல கர்நாடக சங்கீத இளம் கலைஞரும் இசைத்துறை விரிவுரையாளருமான ஆரூரன் அருணந்தி, இத்துறையில் சுமார் பதினைந்து வருட கால அனுபவம் கொண்டவர். இலக்கின் இறுதித் தருணத்தில் மண்டபம் நிறைந்திருந்த இசை ஆர்வலர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு மத்தியில் புதிய சாதனையை நிலைநாட்டினார். வாய்ப்பாட்டை பிரதானமாகக் கொண்டிருந்தாலும் மிருதங்கம், வயலின், வீணை ஆகிய கருவிகளையும் இசைக்கும் ஆளுமையையும் இவர் தன்னகத்தே கொண்டிருக்கின்றார். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் ஏதாவது ஒன்றை சாதித்தோம்...
நடனத்துறையில் வெள்ளிவிழாவையும் பயிலுநர் துறையில் ஒரு தசாப்தத்தையும் கடந்துள்ள தனது நடனப்பணியை கிரமமாக முன்னெடுத்து வருகிறார் கலாசூரி திவ்யா சுஜேன். இளம் வயதில் நடனத்தில் தன்னுடைய ஈடுபாட்டை முழுமையாக செலுத்திய இவர் இத்துறையில் தான் சிறப்புத்தேர்ச்சி பெற்றவராக விளங்க வேண்டும் என்பது மாத்திரமல்லாமல் தான் கற்ற இக்கலையை சக மாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என்ற நோக்கில் அபிநயக்ேஷத்திரா என்னும் நடன கல்வியகத்தை அமைத்து அதனூடாக பல மாணவர்களுக்கு பரதக்கலையை கற்பித்து வருகின்றார். பல மாணவர்களுக்கு அரங்கேற்றமும் செய்துள்ளார். தனது இளம் வயதில் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கும் இவர் ஒரு...