எனது 'அலசல்' நூல் வெளியீடும் - அதன் கருத்துக்களும்- ஏ.எஸ்.எம்.நவாஸ்

அலசல் December 05, 2018
நூல் வெளியீடு... கடந்த இரண்டாண்டு காலமாக வீரகேசரி நாளிதழில் பிரதி வியாழன் தோறும் வெளிவந்த அரசியல் ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் எழுதிய அரசியல் பத்திகளின் தொகுப்பு ‘அலசல்’ (சமகால அரசியல் நிலைவரங்கள்  2017/2018) எனும் தலைப்பிலேயே நூலாக வெளியிடப்பட்டுள்ளது.  குமரன் பதிப்பகத்தின் வெளியீடாக 309 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்த நூல் 64 அரசியல் கட்டுரைகளைக் கொண்டது. வெளியீட்டு விழா 22- –11–2018 வியாழன் அன்று சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.  தமிழ் வாழ்த்து, வரவேற்புரை... நிகழ்வு மங்கள விளக்கேற்றல், ஆசிரியை...

"மின்னும் தார­கைகள்" நூல் ஆசிரியர் பேசுகின்றார் - ஜீவா சதாசிவம்

இலக்கியம் November 08, 2018

கட்சி தாவல்களும் : காட்சி மாற்றங்களும் - ஜீவா சதாசிவம்

அலசல் November 05, 2018
நாமே உருவாக்கிக் கொண்ட ஜனநாயகத்தை நாமே கேலி செய்யும் நிலையில் தான் இன்றைய நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு கிழமைக்கு முன்னால் நமது பாராட்டைப் பெற்றவர்களை நாமே தூற்றுகிறோம். கடந்த வாரம் விமர்சிக்கப்பட்டவர்கள் இந்த வாரம் பரவாயில்லை என்ற நிலைக்கு யோசிக்க வைக்கிறார்கள். அடுத்த வாரம் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்  அவ்வப்போது எதிர்பாராத நிகழ்வுகள்... இது இவ்வாறிருக்க தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை முன்வைத்து நாடெங்கிலும் தொழிலாளர்களுக்கான ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் நாட்டின் தேசிய அரசியலில் ஏற்பட்ட நிலைமாற்றம் அதனைப் பின்தள்ளி விட்டது...

கூட்டு ஒப்பந்தம் ஒன்றா? இரண்டா? - ஜீவா சதாசிவம்

அலசல் October 19, 2018
ஒவ்வொரு சர்வதேச தினம் வரும் போதும் அந்தந்த விடயங்கள் 'உரிய தினத்தில்' மாத்திரம் நினைவுபடுத்தப்படுவது போல கூட்டு ஒப்பந்தம் எனும் அடிமைச் சாசனம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அதுவும் அது காலாவதியாகும் சில வாரங்களுக்கு முன்பிருந்து மாத்திரம் பேசப்பட்டு வருவது வழமையாகி விட்டது. அது போல்தான் 2016ஆம் ஆண்டு ஒக்டோ பரில் செய்யப்பட்ட ஒப்பந்தம்  தற்போது காலாவதியாகிவிட்ட நிலையில், அது பற்றிய பேச்சுவார்ததைகள் சுற்றுக்களின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன் அதுவும் ஒரு பழைய பல்லவியே.  ஒவ்வொரு ஒப்பந்தக் காலப்பகுதியில் பேசப்படும் விடயங்களே தற்போதும் மீள் சுழற்சி முறையில்...

ஊடகவியலின் சக்தி - The Media Power - ஜீவா சதாசிவம்

கட்டுரை October 19, 2018
"ஊடகம் என்பது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் பொறுப்புடையதும் விழுமியங்களைக் கொண்டதுமானதாக இல்லாதபோது ஊடகவியலின் சக்தி பற்றிய வினா எழுப்புவதில் அர்த்தமில்லை" என்கிறார்  ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்குமான கனடாவின் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டொபி மென்டேல். மேற்படி கருத்து நிலையில் நின்று ஊடகவியலையும் அதன் தற்காலப் போக்கையும் அலசி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகிறது.  கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற்ற  "ஊடக சுதந்திரத்துக்கும் சமூகப்பொறுப்புக்குமான கொழும்பு பிரகடனம்" என்னும் சர்வதேச மாநாட்டில் பிரதான பேச்சாளராக கலந்துகொண்ட ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்குமான கனடாவின் மத்திய நிலையத்தின்...

Fairway விருதுக்கு ஐந்து தமிழ் நாவல்கள் - ஜீவா சதாசிவம்

September 17, 2018
தெரிவு செய்யப்பட்ட நாவல்கள்.... இலங்கையில் இலக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கின்ற பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பெயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனம்     4ஆவது தடவையாக நடத்தவுள்ள பெயார்வே–2018 தேசிய இலக்கிய விருது விழா எதிர்வரும் ஆண்டு நடத்தப்படவுள்ள நிலையில் அவ்விழாவில் விருதுகளைப் பெறுவதற்கு மும்மொழியிலும் தெரிவுசெய்யப்பட்ட விருதாளர்களின் பெயர்ப்பட்டியலானது கடந்தவாரம் கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டது.  "மும்மொழிகளிலும் தெரிவுசெய்யப்பட்ட நாவல்களுக்கே பணப்பரிசில்களும் விருதும் வழங்கப்படும்.   ஒவ்வொரு  மொழியிலும் முதலாவது இடத்துக்குத் தெரிவு செய்யப்படும் தலைசிறந்த  நாவலுக்கு 5 இலட்சம் ரூபா பரிசாக வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து குறும்பட்டியலுக்குத்...

உறவென்பது உன்னதமானது - ஜீவா சதாசிவம்

September 15, 2018
இந்திய பேச்சாளர் (Motivation Speaker) பரமன் பச்சைமுத்துவின் 'உறவுகளில் உன்னதம்' என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நாளை  16 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  காலை 10.00 மணிமுதல் பம்பலப்பிட்டி லோறன்ஸ் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற வுள்ளது. நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஏற்பாட்டில், கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் உயர்தரம் பயிலும் மாணவ, மாணவியருக்கும் கொழும்பில் தொழில் புரியும் இளைஞர், யுவதிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இச்சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இலவசமாக இந்நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் 'உறவுகளின்   உன்னதம்'  உட்பட   பலதரப்பட்ட...

இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான எழுச்சிகளோடு மேலெழுந்த அச்சு ஊடகமே வீரகேசரி - ஜீவா சதாசிவம்

இலக்கியம் September 10, 2018
இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான எழுச்சிகளோடு மேலெழுந்த அச்சு ஊடகமே வீரகேசரி. இந்திய விடுதலை இயக்கம், இலங்கைத் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம், காலனித்துவச் சூழலில் விசை கொண்ட தமிழ் மறுமலர்ச்சி ஆகியவற்றோடு தோற்றம் பெற்ற இதழ்களுள் வீரகேசரி முக்கியமானது.  “எங்கள் பத்திரிகை” என்று கூறும் மரபு தமிழ்ச் சூழலிலே வளர்ச்சியடைந்தது. “எங்கள் பத்திரிகை” “எங்கடை பேப்பர்” முதலாம் சொல்லாடல்களே வீரகேசரி தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கி வரும் பங்களிப்பைக் குறியீட்டுப்படுத்தும் என்கிறார் பேராசிரியர் சபா ஜெயராசா.  வீரகேசரி பத்திரிகை 89ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு...

வாரிசு அரசியல் - ஜீவா சதாசிவம்

அலசல் September 08, 2018
வாரிசு அரசியல்  உலகில் புதிதாக உருவானதொன்றல்ல. மேலைத்தேய நாடுகள் உட்பட வளர்ந்துவரும் நாடுகளிலும் வாரிசு அரசியல் பல நூற்றாண்டுக் கணக்கில் இருந்தே வருகின்றது.  ஆக, ஆச்சரியமான விடயமாக இல்லாதபோதிலும் கடந்த வாரம் தொடர்ச்சியாக  ஊடகங்கள் வாயிலாக பேசுபொருளான விடயமாக "வாரிசு அரசியல்" இருந்தது. அதனை பற்றியே இவ்வார அலசலும் பேசுகின்றது. உலக அரசியலை எடுத்துக்கொண்டால்,  உலகளாவிய ரீதியில் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு தலைவரும் தான் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் காலத்தில் தன்னுடைய வாரிசுகளில் ஒருவரே இதனைத் தொடர்ச்சியாக கொண்டு செல்வதான கட்டமைப்பை உருவாக்கிகொள்கின்றார்.   தலைவர்களைத் தெரிவு செய்வது மக்களாக இருந்தாலும்...

நடனத்துறையில் மூன்று தசாப்தத்தை கடந்துள்ள ''கலைச்செல்வி ' நிர்மலா ஜோன்' - ஜீவா சதாசிவம்

இலக்கியம் September 01, 2018
3 தசாப்தத்தைக் கடந்து ஒரு நிர்மலாஞ்சலி  நாட்டிய பள்ளியை  நடத்திவரும் நீங்கள் இதுவரையில் எதிர்கொண்ட சவால்கள் எவ்வாறானது என்பது பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? பல சவால்கள் இன்னல்கள் என்று அனுபவித்துள்ளேன். ஆனால் என்னுடைய தணியாத தாகம், - விடாமுயற்சி – நாட்டியத்தின்மேல் உள்ள பிரியம், - என்னுள் இருக்கும் இனம்புரியாத சக்தி இவையெல்லாம் சேர்ந்து எதுநேர்ந்தாலும் முகம்கொடுத்து மன சக்தியுடன் எனது நடனப் பயணத்தை தொடர ஒருவிதத்தில் இந்த சவால்கள் என்னை நடனத்துறையில் முன்னோக்கிச் செல்ல வழியமைப்பதாகவே அமைகின்றது என்றுகூட சொல்லலாம்.  இதுவரையில் பல வகையான நாட்டிய...

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images